மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு; அறுபடை வீடுகளின் கண்காட்சி துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூன் 2025 10:06
மதுரை; மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு அறுபடை வீடுகளின் கண்காட்சி இன்று திறக்கப்பட்டது.
மதுரையில் ஹிந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. அறுபடை வீடுகள் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களை சீரமைக்க வலியுறுத்தியும், முருக பக்தர்களை ஒன்று திரட்டவும் ‘குன்றம் காக்க... கோயிலைக் காக்க...’ என்ற பெயரில் மாநாடு நடக்கிறது. இம்மாநாட்டில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான முருக பக்தர்கள் ஒன்று திரள்கின்றனர். முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு அறுபடை வீடுகளின் கண்காட்சியை புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் தீபாராதனை காட்டி இன்று திறந்து வைத்தார். மதுரையில் ஜூன் 22 ல் மதியம் 3:00 முதல் இரவு 8:00 மணி வரை நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உ.பி., முதல்வர் யோகி ஆதித்ய நாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.