திருப்பதியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூன் 2025 12:06
திருப்பதி; மத்திய அமைச்சர் ஸ்ரீ பியூஷ் கோயல், குடும்ப உறுப்பினர்களுடன் இன்று திங்கள்கிழமை திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமியை பிரார்த்தனை செய்தார்.
திருப்பதியில் இன்று காலை சிறப்பு தரிசனம் மூலமாக, அமைச்சர் பியூஷ் கோயல் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அவருக்கு வேத ஆசீர்வாதங்கள் முழங்க தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது; "இன்று எனது பிறந்தநாளில், பகவான் பாலாஜி முன் பிரார்த்தனை செய்யும் வாய்ப்பு கிடைத்தது எனது மிகப்பெரிய அதிர்ஷ்டம். ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி பாலாஜியிடம் பிரார்த்தனை செய்து, நாட்டிற்காக உழைக்க அவரது ஆசிகளைப் பெற இங்கு வருகிறேன். இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நல்ல எதிர்காலத்திற்காக அவரது ஆசிகளை நான் வேண்டுகிறேன்." என்றார்.