பதிவு செய்த நாள்
16
ஜூன்
2025
01:06
திருப்பூர், திருப்பூர், காலேஜ் ரோடு திரு.வி.க., நகர் செல்வகணபதி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றினர்.
திருப்பூர் – காலேஜ் ரோடு, திரு.வி.க., நகர், எல்.ஐ.சி., காலனி, கே.ஆர்.ஈ., லே அவுட் ஸ்ரீசெல்வ கணபதி கோவில் கும்பாபிஷேக விழா, 14ம் தேதி மங்கள இசை, திருவிளக்கு வழிபாடு, விநாயகர் வழிபாடுடன் துவங்கியது. கோபூஜை, கஜபூஜை உள்ளிட்ட பூஜைகள், தீர்த்தக்குடம் ஊர்வலம் நடந்தது. நேற்று காலை, கோபுர கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது; மாலையில், முதல்கால வேள்வி பூஜைகள் துவங்கியது. மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இன்று காலை 6:30 மணிக்கு, இரண்டாம்கால வேள்வி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து 9:30 மணி முதல், 10:30 மணிக்குள், மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றினர். தொடர்ந்து, கோபூஜை, தசதானம், தசதரிசனம், மகா அபிஷேகம், அலங்கார பூஜைகளும், அன்னதானமும் நடைபெற்றது.