வால்பாறை; ஆனி மாத முதல் நாளான நேற்று, ஐயப்பசுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஐயப்பசுவாமிக்கு, ஆனி மாத முதல் நாளான நேற்று காலை, 5:00 மணிக்கு சிறப்பு யாக பூஜையும், அதனை தொடர்ந்து அபிஷேக பூஜை நடந்தன. பின் காலை, 11:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ஐயப்பன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜையில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர். இதே போல் வால்பாறை வாழைத்தோட்டம் ஐயப்பசுவாமி கோவிலிலும் நேற்று காலை சிறப்பு அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடைபெற்றது.