பதிவு செய்த நாள்
16
ஜூன்
2025
04:06
சேத்தியாத்தோப்பு; குமாரக்குடி மதுர காளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரினம் செய்தனர். சேத்தியாத்தோப்பு அடுத்த குமாரக்குடி மதுர காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்று காலை 9:00 மணிக்கு அனுக்ஞை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பூர்வாங்க பூஜை, மாலை 6:00 மணிக்கு யாகசாலை பிரவேசம், முதல்கால யாக பூஜை, இரவு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தது. இன்று காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, கோ பூஜை, தன பூஜைகள், 9:00 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, கடம் புறப்பாடாகி 10:00 மணிக்கு விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.