Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மண்மலை கருப்பசாமி கோவிலில் ... காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா; பந்தகால் முகூர்த்தம் காரைக்கால் அம்மையார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சேரிமலையில் சேதமடைந்த முருகன் சிலை; புனரமைப்பதில் சுணக்கம் என குச்ச்சாட்டு!
எழுத்தின் அளவு:
செஞ்சேரிமலையில் சேதமடைந்த முருகன் சிலை; புனரமைப்பதில் சுணக்கம் என குச்ச்சாட்டு!

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2025
05:06

பல்லடம்; செஞ்சேரிமலை  முருகன் கோவிலில் ஓராண்டுக்கு முன் சேதமடைந்த முருகன் சிலையை புனரமைப்பதில் அறநிலையத்துறை சுணக்கம் காட்டி வருவதாக பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் செஞ்சேரிமலை முருகன் கோவில் உள்ளது. மூலவராக மந்திரகிரி வேலாயுத சுவாமி அருள்பாலிக்கிறார். வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலில், வைகாசி விசாகம், தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட விழாக்கள் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கிருத்திகை,  சஷ்டி, பிரதோஷம் உட்பட, ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நாட்களில் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து முருகனை வழிபட்டு செல்கின்றனர். வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலில், படிக்கட்டுகள் வழியாக மலைக்குச் செல்லும் வழியில் குழந்தை குமாரர் கோவில் உள்ளது. இதிலுள்ள முருகன் சிலை கடந்த ஓராண்டுக்கு முன் சேதப்படுத்தப்பட்டது. இதில், முருகன் சிலையின் வலது கை மற்றும் மயிலின் தலையும் உடைபட்டது. இச்சம்பவம் நடந்து ஓராண்டுக்கு மேல் ஆகியும், சிலை புனரமைக்கப்படாதது பக்தர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி வருகிறது.


இது குறித்து பக்தர்கள் கூறுகையில், மனநலம் பாதித்த ஒருவரால், கடந்த ஓராண்டுக்கு முன் குழந்தை குமாரர் சிலை சேதப்படுத்தப்பட்டது. சிலை புதுப்பிக்கப்படாமல் இருந்த நிலையில், ஆறு மாதத்துக்கு முன் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, அறநிலையத்துறை இணை கமிஷனர் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு சிலையை புதுப்பிக்க உத்தரவிட்டார். உபயதாரர்கள் உடனடியாக சிலையை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதன்படி, புதிய சிலை தயாராகி நான்கு மாதங்களுக்கு மேல் ஆகியும், சிலையை பிரதிஷ்டை செய்யாமல், பழைய உடைந்த சிலையை  அகற்றாமலும் அறநிலையத்துறை அலட்சியம் காட்டி வருகிறது. உடைந்த சிலையை உடனடியாக அகற்றி, தயாராக உள்ள புதிய முருகன் சிலையை பிரதிஷ்டை செய்ய அறநிலையத்துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், வியாஸராஜர் ராம நாம பஜனை மடத்தில் கம்பராமாயணம் தொடர் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, 16 கால் மண்டபம் அருகில் கார், வேன், பேருந்து உள்ளிட்ட ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், ஆண்டு தோறும், வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக ... மேலும்
 
temple news
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை நடந்தது.கோபால்பட்டி அருகே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar