காரைக்கால்; காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழாவை முன்னிட்டு இன்று பந்தகால் முகூர்த்தம் நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டத்தில் சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் காரைக்கால் அம்மையார் இவரின் இயற்பெயர் புனிதவதியார் 63 நாயன்மார்களின் பெண் நாயன்மாரான காரைக்கால் அம்மையாருக்கு தனி கோவில் உள்ளது. காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் ஆண்டு தோறும் மாங்கனி திருவிழா நடக்கிறது.இந்தாண்டு மாங்கனித்திருவிழாவை முன்னிட்டு மாங்கனித் திருவிழாவுக்கான பந்தல்கால் முகூர்த்தம் இன்று அமையார் கோவிலில் நடைபெற்றது. முன்னதாக அம்மையார் மற்றும் பந்தகாலுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதனால் மாங்கனித்திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது. இதில் வரும் ஜூலை 8ம் தேதி மாப்பிள்ளை (பரமதத்தர்) அழைக்கும் நிகழ்ச்சி,9ம் தேதி அம்மையார்,பரமதத்தர் திருக்கல்யாணம் உற்சனம், மாலை பிச்சாண்டவர் வெள்ளைச் சாற்று புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஜூலை 10ம் தேதி பவழக்கால் சப்பரத்தில் பிச்சாண்டவர் வீதியுலா செல்லும் போது பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு இணையாக முக்கிய இடங்களிலிருந்து மாங்கனி இறைக்கும் நிகழ்ச்சி வெகுவிமர்ச்சியாக நடைபெறுகிறது. அன்று மாலை அம்மையார் கோவில் அமுதுபடையல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வரும் 11ம் தேதி காரைக்கால் அம்மையாருக்கு சிவபெருமான் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கோவில் தனி அதிகாரி காளிதாசன் உள்ளிட்ட விழாக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.