திருவண்ணாமலை ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலில் பாலாலய சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூன் 2025 05:06
திருவண்ணாமலை; ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேக பணிகள் தொடங்குவதை முன்னிட்டு, பாலாலய சிறப்பு பூஜை நடந்தது.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் அண்ணாமலையார் சுயம்புலிங்கமாக மலையின் கிழக்குத் திசையிலும், ஸ்தாபித லிங்கமாக மலையின் மேற்குத் திசையிலும் தம்மைத் தோற்றுவித்துக் கொண்டார். கிழக்குத் திசையில் அமைந்த சுயம்புலிங்கம் அருணாசலேஸ்வரர் என்ற பெயருடன் திருமாலால் பூஜிக்கப் பெற்றார். மலையின் மேற்குத் திசையில் அடி அண்ணாமலை திருத்தலத்தில் பிரம்ம தேவரால் ஸ்தாபிதம் செய்யப்பெற்று பூஜிக்கப் பெற்று ஆதி அருணாசலேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்கிறார். இத்தலத்தில் கும்பாபிஷேக பணிகள் தொடங்குவதை முன்னிட்டு, பாலாலய சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.