Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி ம்ருத்யுஞ்சய சுவாமிக்கு ... சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் வராகி அம்மனுக்கு பஞ்சமி சிறப்பு பூஜை சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் வராகி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரையில் தத்ரூபமாக அமைக்கப்பட்ட அறுபடை வீடுகளின் அருட்காட்சி
எழுத்தின் அளவு:
மதுரையில் தத்ரூபமாக அமைக்கப்பட்ட அறுபடை வீடுகளின் அருட்காட்சி

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2025
10:06

மதுரை; மதுரை வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன் 22 ல் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு அறுபடை வீடுகளின் அருட்காட்சியில் நுழைவு வாயில் முதல் மூலவர் வரை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.இதனை புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று பூஜை செய்து துவக்கி வைத்தார்.

மதுரை வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன் 22 ல் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு அறுபடை வீடுகளின் அருட்காட்சியில் நுழைவு வாயில் முதல் மூலவர் வரை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று பூஜை செய்து துவக்கி வைத்தார். ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், துணைத் தலைவர் ஜெயகுமார் முன்னிலை வகித்தனர். கோயில் வளாகத்தை கண்முன் கொண்டு வரும் வகையில் கற்சிற்பங்கள், கோயிலின் தலவரலாற்றுடன் கூடிய பேனர் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு செல்லும் உணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நுழைவு வாயில் முதல் கருவறை வரை ஒவ்வொரு அமைப்பும் தத்ரூபமாக கொண்டு வரப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில் வைத்து வழிபாடு நடத்திய வேல் அந்தந்த சன்னதியில் வழிபாட்டிற்கு வைக்கப்பட்டு உள்ளன. மக்கள் தினமும் காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி, மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை அனுமதிக்கப்படுவர். அனைத்து படை வீடுகளையும் தரிசனம் செய்யும் வகையில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் துவங்கி திருச்செந்துார், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை என வரிசையாக அமைந்துள்ளது. இந்த வரிசையில் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும்.ஒவ்வொரு படை வீட்டிற்குள்ளும் வரிசையாக செல்லும் வகையில் தடுப்புகளும், மாற்றுத்திறனாளிகள் செல்லும் வகையில் சரிவுகளும் அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதி, குடிநீர், கழிவறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. துவக்க நிகழ்ச்சியில் ஹிந்து முன்னணி நிர்வாகிகள் கிஷோர்குமார், பக்தவச்சலம், பா.ஜ., மாநில விவசாய அணி துணை தலைவர் சசிராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முருகனுக்கு உரிய விரதங்களில் முக்கியமானது சஷ்டி விரதமாகும். செவ்வாய் கிழமையில் சஷ்டி விரதம் வருவது ... மேலும்
 
temple news
புதுச்சேரி; பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வீற்றிருக்கும் ம்ருத்யுஞ்சய சுவாமிக்கு ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் ஆனித் திருவிழாவிற்காக நேற்று முகூர்த்தக்கால் ஊன்றும் விழாவில் ... மேலும்
 
temple news
திருபுவனை; திருபுவனை அடுத்த சன்னியாசிக்குப்பம் சன்னியாசிக்குப்பத்தில் உள்ள சந்திரமவுலீஸ்வரர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar