பதிவு செய்த நாள்
17
ஜூன்
2025
11:06
பழநி; பழநி, மூன்றாம்படை வீடான திருஆவினன்குடி கோயில் கும்பாபிஷேக பணிக்கான பாலாலய பூஜை நடந்தது.
பழநி, மூன்றாம்படை வீடான திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்தது. இக்கோயிலில் சொக்கலிங்கேஸ்வரர், மீனாட்சி சன்னதி, அண்ணாமலையார், உண்ணாமலை நாயகி சன்னதி, சனீஸ்வர சன்னதி, விநாயகர், நக்கீரர், துர்க்கை அம்மன், தட்சிணாமூர்த்தி, அருணகிரிநாதர், உள்ளிட்டவை வெளிப்பிரகாரத்தில், குழந்தை வேலாயுத சுவாமி சன்னதி, பிரம்மா, காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, பசுபதீஸ்வரர், மீனாட்சி, அம்மன், சுந்தரேஸ்வரர், பைரவர் வீரபாகு, தட்சிணாமூர்த்தி, லட்சுமி, காமதேனு, சூரியன், பூமாதேவி, அக்னி ஆகிய சுவாமிகள் உள்ளன. கோயில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற பாலாலய பூஜைக்கான நேற்று காலை 2ம்காலயாகம் நடைபெற்றது. இதில் விநாயகர் பூஜை, வாஸ்து பூஜை, கலச பூஜை, அத்தி மரத்தில் பாலாலய பூஜை ஆகியவை நடைபெற்றது. கலசங்கள் கோயிலை சுற்றி வலம் வந்து உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன்பின் கோயில் வட கிழக்கு திசையில் கோ பூஜை செய்து பணிகள் துவங்கி வைக்கப்பட்டன. கோயில் திருப்பணிகள் ரூ.ஒரு கோடி மதிப்பீட்டில் 5 மாதங்கள் நடைபெறும் என அதிகாரி கூறினார். நிகழ்ச்சியில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, உதவி கமிஷனர் லட்சுமி , கண்காணிப்பாளர்கள் ராஜா, அழகர்சாமி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.