தேவகோட்டை; தேவகோட்டை தேனம்மை ஊரணி கரையில் தர்ம முனீஸ்வரர், காளியம்மன் கோயில் உள்ளது. மேலும் இக்கோயிலில் செல்வ விநாயகர், முன்னோடி தெய்வம், குரு தத்தாத், திரேயர், மகாலிங்க சுவாமி, மகா காள கருப்பர் சந்நிதிகளும் உள்ளன. அனைத்தும் சுவாமிகளும் சந்நிதிகள் புதிதாக திருப்பணி செய்யப்பட்டு இரண்டு கால யாக சாலை பூஜைகள் நடந்தன. ஹாலாஸ்ய ஜானகி ராமன் கும்பத்தில் புனித நீரை ஊற்றி கும்ப அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு மகா அபிஷேகமும் செய்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கும்பாபிஷேகத்தை கண்டு களித்தனர்.