ஸ்ரீவி. திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்; ஜூலை 14ல் நடக்கிறது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூன் 2025 12:06
ஸ்ரீவில்லிபுத்துார்; தென்திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 14ல் நடக்கிறது.
இதனை முன்னிட்டு நேற்று காலை யாகசாலை பூஜைக்கான முகூர்த்த கால் நடும் வைபவம் செயல் அலுவலர் சர்க்கரை அம்மாள் தலைமையில் நடந்தது. கோயில் பட்டர்கள் ரகு,கிரி, அனிருத் பட்டர்கள் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து முகூர்த்த காலை நட்டினர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா தலைமையில் அறநிலைத்துறையினர், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர். ஜூலை 12 காலை முதல் யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்குகிறது. ஜூலை 14 காலை 5:30 மணிக்கு மேல் 6:30 மணிக்குள் சீனிவாச பெருமாள் விமானம், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறநிலையத் துறையினர் செய்து வருகின்றனர்.