கோவை; சரவணம்பட்டி, கரட்டு மேடு மருதாசல மூர்த்தி என்று அழைக்கப்படும் முருகப்பெருமான் கோவிலில் ஆனி மாதம் முதல் செவ்வாய் கிழமை மற்றும் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் சந்தன காப்பு அலங்காரத்துடன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் தீப ஒளியில் ஜொலித்த முருகனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.