பதிவு செய்த நாள்
17
ஜூன்
2025
05:06
விருத்தாச்சலம் ; விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் சஷ்டியையொட்டி முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சஷ்டியையொட்டி விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. கடலுார் மாவட்டம், விருத்தாசலம், மணவாளநல்லுார் சித்தி விநாயகர் உடனுறை கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில் காலை சுவாமிகளுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பகல் 12:00 மணிக்கு கொளஞ்சியப்பர் சிறப்பு வெள்ளி கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர், 28 ஆகம சன்னதியில் உள்ள குமரேச சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அதேபோல், வேடப்பர் சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.