கொங்கு மண்டல ஞானரத யாத்திரையில்,செந்தமிழ் சொக்கநாதர் சிவ பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூன் 2025 10:06
அவிநாசி; அவிநாசியில் கொங்கு மண்டல ஞானரத யாத்திரை மேற்கொண்டுள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு பூர்ண கும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது.
பெங்களூரூ வேத ஆகம சமஸ்க்ருத மஹா பாடசாலை ஸ்ரீ ஸ்ரீ குருகுலம் வேத விஞ்ஞான மஹா வித்யாபீடம் முதல்வர் அவிநாசி சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார் ஸ்ரீமதி மகாலட்சுமியின் ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தி மணிவிழாவில்,கலந்து கொள்ள,கொங்கு மண்டலத்திற்கு முதல் முறையாக வந்துள்ள திருகயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம் 27வது குரு மஹா சந்திதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமி நேற்று கொங்கு மண்டல ஞான ரத யாத்திரையில், திருப்புக்கொளியூர் அவிநாசி திருத்தலத்திற்கு எழுந்தருளினார். அவிநாசி அன்னூர் ரோட்டில் ஆட்டையாம்பாளையம் அருகே உள்ள ஸ்ரீ சரவண மஹாலில் நடைபெறும் செந்தமிழ் சொக்கநாதர் சிவபூஜையை இன்று காலை துவக்கி வைக்கிறார். திருப்புக் கொளியூர் வாகீசர் மடாலய ஆதீனம் ஸ்ரீ காமாட்சி தாச ஸ்வாமிகள் தலைமையில் சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார்,அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தியாகு குருக்கள் உள்ளிட்டோர் பூரண கும்ப மரியாதை அளித்து ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமியை வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு ஆசிகள் வழங்கினார்.