பதிவு செய்த நாள்
18
ஜூன்
2025
11:06
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த. ‘மாஸ்டர் பிளான்’ திட்டத்தை. அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் அறிவித்தார்.
இந்த திட்டத்தில், திருத்தணி முருகன் கோவிலில் புதிதாக மூன்று அடுக்கு அன்னதானக் கூடம், வாகன நிறுத்துமிடம், ஒன்பது நிலை ராஜகோபுரம் – தேர்வீதியை இணைக்கும் இணைப்பு படிகள் கட்டும் பணிகளுக்கு, கடந்தாண்டு 86.76 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிடப்பட்டது. இந்த வளர்ச்சி பணிகளுக்கு இரு மாதங்களுக்கு முன் டெண்டர் விடப்பட்டது. இப்பணிகளை நேற்று, தமிழக முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக தலைமை செயலகத்திலிருந்து துவக்கி வைத்தார். தொடர்ந்து, திருத்தணி முருகன் மலைக்கோவில் வளாகத்தில் கலெக்டர் பிரதாப், அரக்கோணம் எம்.பி., ஜெகத்ரட்சகன், திருத்தணி தி.மு.க., – எம்.எல்.ஏ., சந்திரன், முருகன் கோவில் இணை ஆணையர் ரமணி ஆகியோர் அடிக்கல் நட்டு, வளர்ச்சி பணிகளை துவக்கி வைத்தனர்.