பதிவு செய்த நாள்
19
ஜூன்
2025
10:06
திண்டுக்கல்; திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. தாடிக்கொம்பு சவுந்திரராஜபெருமாள் கோயிலில் சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு இளநீர், தேன், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோயமுத்துார், திருப்பூர், ஈரோடு கரூர், பல்லடம், உடுமலைப்பேட்டை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி, உறுப்பினர்கள்,பட்டாச்சாரியார்கள் செய்திருந்தனர்.
திண்டுக்கல் பத்மகிரீஸ்வரர் அபிராமியம்மன் கோயில், கூட்டுறவுநகர் செல்வவிநாயகர் கோயில், ஜான்பிள்ளை சந்து வாராகி அம்மன் கோயில் , பழநி ரோடு பத்திரகாளியம்மன் கோயில், ரயிலடி விநாயகர் கோயில்,என்.ஜி.ஓ., காலனி சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் பைரவர் சன்னதியில் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. மிளகு, தேங்காய், வெள்ளைப் பூசணியில் விளக்கு ஏற்றி பக்தர்கள் வழிப்பட்டனர். நத்தம் : குட்டூர் உண்ணாமுலை அம்பாள் உடனுறை அண்ணாமலையார் கோயில் கால பைரவர் சன்னதியில் 16 வகை அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் காலபைரவர் சன்னதியிலும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடந்தது. சின்னாளபட்டி : சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. மூலவருக்கு திரவிய அபிஷேகத்துடன் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அஷ்டோத்திர பூஜை, மகா தீபாராதனை நடந்தது. செம்பட்டி கோதண்டராமர் கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.