பதிவு செய்த நாள்
19
ஜூன்
2025
10:06
வந்தவாசி; வந்தவாசி அருகே, 36 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமி சிலை செய்ய, 150 டன் கொண்ட பாறை, ராட்சத லாரி மூலம், பழவேரி கிராமத்திலுள்ள சிற்ப கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சென்னை, தி.நகரிலுள்ள அயோத்தியா வேத பாடசாலையில், எஸ். கே.என்., டெம்பிள்ஸ் அறக்கட்டளை சார்பில், ஒரே கல்லில், 36 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமி சிலை நிறுவ, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை கிராமத்திலுள்ள குன்றில், கல் வெட்டி எடுக்கும் பணி, கடந்த ஓராண்டாக நடந்து வந்தது. தற்போது கல் வெட்டி எடுக்கும் பணி முடிந்து, சிலை செதுக்க, காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த பழவேரி கிராமத்தில் உள்ள சிற்ப கூடத்திற்கு, ராட் சத லாரி மூலம், 36 அடி உயரம், 12 அடி அகலம் கொண்ட, 150 டன் எடை கொண்ட ஒரே கல்லால் ஆன பாறையை எடுத்தும் செல்லும் பணி நேற்று தொடங்கியது. இதற்காக, 180 டயர் கொண்ட கார்கோ லாரி வரவழைக்கப்பட்டு, அதில் ஏற்றப்பட்டது. இது, நேற்று புறப்பட்டது. லாரி தெள்ளார், வந்தவாசி, மேல்மருவத்துார், மதுராந்தகம் வழியாக பழ வேரி கிராம சிற்ப கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.