பதிவு செய்த நாள்
19
ஜூன்
2025
11:06
மோகனுார்; நாவலடி கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேக, 7ம் ஆண்டு நிறைவு விழாவில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மோகனுாரில், பிரசித்தி பெற்ற நாவ லடி கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. அதன் துணை கோவில்களாக, மாரி யம்மன், காளியம்மன் கோவில்களும் உள் ளன. ஹிந்து சமய அறநிலையத்துறை கட் டுப்பாட்டில் உள்ள இக்கோவில்களில், கும்பாபிஷேக, 7ம் ஆண்டு நிறைவு விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. விழாவையொட்டி, அரண்மனை சாவடி விநாயகர், மாரியம்மன் மற்றும் நாவ லடி கருப்பண்ணசாமி கோவில்களில், சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து, காளியம்மன் கோவிலில், சிவாச்சாரியார்கள் சிறப்பு யாக பூஜை செய்தனர். மேலும், மூலவர் காளியம்மனுக்கு, பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமி வெள்ளி கவசத்தில் எழுந்தருளி பக்தர் களுக்கு அருள்பாலித்தார். பரம்பரை அறங்காவலர் குழு தலைவர், வேலுராஜா மணி, உறுப்பினர்கள், சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள், நாமக்கல், சேலம், கரூர், திருச்சி, ஈரோடு உள்பட பல்வேறு மாவட் டங்களை சேர்ந்த குடிபாட்டு மக்கள் உள் பட பலர் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னாதனம் வழங்கப்பட்டது.