Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு 400 ... காளஹஸ்தி தர்மராஜர் கோவில் திருவிழா சுவரொட்டி வெளியீடு காளஹஸ்தி தர்மராஜர் கோவில் திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேகம் தடை கோரிய வழக்கு தள்ளுபடி
எழுத்தின் அளவு:
திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேகம் தடை கோரிய வழக்கு தள்ளுபடி

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2025
11:06

மதுரை:திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவில் புனரமைப்பு பணிக்கு, கேரள சம்பிரதாய ஆகம நிபுணர்கள் குழுவை அமைக்க வேண்டும். இல்லையெனில், கும்பாபிஷேகம் நடத்த தடை விதிக்க வேண்டும் என தாக்கலான வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் திருச்செந்துார் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த பொதுநல மனு: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஜூலை 7ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இக்கோவில் மலையாள தாந்திரீகம் ஆகமத்தை பின்பற்றக்கூடியது. கேரளா முட்டவிளை மடம் தந்திரி சுப்பிரமணியரு தான் தலைமை ஆன்மிக குரு.கும்பாபிஷேகத்திற்கு புனரமைப்பு பணி மேற்கொள்ள அறநிலையத் துறை அமைத்த குழுவில் சைவம், வைணவ ஆகம நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆனால் அவர்கள், மலையாள தாந்திரீக ஆகமத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள் அல்ல. அந்த ஆகம நிபுணர்கள் குழுவில் இடம்பெறவில்லை. கேரள சம்பிரதாய ஆகம நிபுணர்கள் குழுவை அமைக்க வேண்டும். இல்லையெனில் கும்பாபிஷேகம் நடத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.கோவில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மாநில அளவில் வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் அனுமதியுடன் திருச்செந்துார் கோவிலில் புனரமைப்பு பணி நடக்கிறது. பெரும் பகுதி பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது என்றார். இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஏற்கனவே நிபுணர் குழு அமைத்து புனரமைப்பு பணி நடக்கிறது. இதனால் இவ்வழக்கில் மேலும் உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை. பாரம்பரிய நடைமுறைகளை பின்பற்றுவதில் விதிமீறல் இருந்தால் அறநிலையத்துறையிடம் நிவாரணம் தேடலாம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.  இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மறுசீராய்வு மனு நிலுவை; திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேக நேரத்தை மாற்ற உத்தரவிடக் கோரி, ஏற்கனவே ஒரு வழக்கு தாக்கலாகி இருந்தது.அதை விசாரித்த உயர் நீதிமன்றம், சபரிமலை அய்யப்பன் கோவில் மேல்சாந்தி உட்பட ஐந்து பேர் அடங்கிய குழு, கும்பாபிஷேகம் நடத்த எந்த நேரம் உகந்தது என்பது குறித்து விவாதிக்க வேண்டும். அந்த நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. அதை மறு சீராய்வு செய்யக்கோரும் மனு நிலுவையில் உள்ளது. திருப்பூர், வீரராகவ பெருமாள் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள் நடைப்பெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகம் கிரிவீதியில் உயர்மட்ட நிழல் மண்டபங்களை அமைக்க ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; உலக நன்மைக்காக நடத்தப்பட்ட குபேர மகாலட்சுமி மகா யாகத்தில் நடிகர் சூரி, ஜப்பான் ... மேலும்
 
temple news
சோழவந்தான்; சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா தீர்த்தவாரி உற்ஸவத்துடன்  ... மேலும்
 
temple news
நாமக்கல்; நாமக்கல் நகரின் மையப்பகுதியில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar