அறுபடை வீடுகளின் அருட்காட்சி; குவியும் பக்தர்கள்.. தீபாராதனை காட்டி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூன் 2025 12:06
மதுரை; மதுரையில் வரும், 22ல், ஹிந்து முன்னணி சார்பில், முருக பக்தர்கள் மாநாடு நடக்க உள்ளது. அதில் முருக பக்தர்கள் திரளானோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு அறுபடை வீடுகளின் அருட்காட்சியை தரிசிக்க வந்த புதுச்சேரி துணைநிலை கவர்னர் கைலாஷ் நாதன் தீபாராதனை காட்டி வழிபட்டார். அறுபடை வீடுகளின் அருட்காட்சியை தரிசிக்க தினமும் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். அறுபடை வீடுகள் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களை சீரமைக்க வலியுறுத்தியும், முருக பக்தர்களை ஒன்று திரட்டவும் ‘குன்றம் காக்க... கோயிலைக் காக்க...’ என்ற பெயரில் மாநாடு நடக்கிறது. இம்மாநாட்டில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான முருக பக்தர்கள் ஒன்று திரள்கின்றனர்.