மகான் ராகவேந்திரரின் பரமகுரு விஜயேந்திர சுவாமிகளின் 411 வது ஆண்டு ஆராதனை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூன் 2025 12:06
கும்பகோணம்; மந்திராலய மகான் ராகவேந்திரரின் பரமகுரு விஜயேந்திர சுவாமிகளின் 411 வது ஆண்டு ஆராதனை விழா எதிர்வரும் 20ம் தேதி தொடங்கி 25ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளில் மந்த்ராலயா மடத்தின் மடாதிபதி சுபுதேந்திர தீர்த்த சுவாமிகள் பங்கேற்கிறார். கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பு. கும்பகோணம் சோலையப்பன் தெருவில் அமைந்துள்ளது விஜயேந்திர சுவாமிகளின் மூல பிருந்தாவனம். இங்கு விஜயேந்திர சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்துள்ளார். மகான் விஜயேந்திரருக்கு சீடராக இங்கு பணியாற்றியவர் தான் மகான் ராகவேந்திரர். விஜயேந்திர தீர்த்த சுவாமிகளின் 411 வது ஆண்டு ஆராதனை விழா எதிர்வரும் 20ஆம் தேதி விஜயேந்திர சுவாமிகள் மூல பிருந்தாவனத்தில் துவங்குகிறது. இதில் மந்த்ராலய மடாதிபதி சுபதேந்திர சுவாமிகள் கலந்து கொள்கிறார். இருபதாம் தேதி திருமலை திருப்பதி சீனிவாச பெருமானின் சேஷ வஸ்திரம் மூல பிருந்தாவனத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான மத்திய ஆராதனை நிகழ்ச்சி 23ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு கனகாபிஷேகம்நடைபெற உள்ளது. 24 ஆம் தேதி ரதத்தில் விஜயேந்திர சுவாமிகள் வீதி உலா நடைபெற உள்ளது. 25ஆம் தேதி ஸ்ரீ நாராயண பூதராஜர் பூஜை ஆகிய நிகழ்வுகளுடன் விஜயந்திரரின் 411 ஆவது ஆண்டு ஆராதனை விழா நிறைவு பெறுகிறது . விழா ஏற்பாடுகள் குறித்து விஜயேந்திர சுவாமிகள் மடத்தின் மேலாளர் நரசிம்மன் செய்தியாளரிடம் இதனை தெரிவித்தார்.