பெரியகுளத்தில் காளியம்மனுக்கு இளைஞர்கள் விளையாட்டு அக்னிசட்டி நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூன் 2025 01:06
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இளைஞர்களின் விளையாட்டு அக்னி சட்டி நேர்த்திக்கடன் நடைபெற்றது.
பெரியகுளம் தென்கரை கோட்டை தெருவில் அமைந்துள்ளது காளியம்மன் கோவில் இக்கோவிலில் திருவிழாவை முன்னிட்டு காளியம்மனுக்கு பால் தயிர் பன்னீர் சந்தனம் குங்குமம் இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்கள் கொண்டு காலை அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் காளியம்மனுக்கு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் விளையாட்டு என்னும் ஆடியோ படி அக்கினி சட்டி நேர்த்திக்கடனை காளியம்மனுக்கு செலுத்தினர். இதில் பெரியகுளம் வள்ளுவர் சிலை பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் அக்னி சட்டி வழக்கப்பட்டு இங்கிருந்து இளைஞர்கள் அக்னி சட்டியை வெரும் கையில் ஏந்தியபடி வள்ளுவர் சிலை, ஆடுபாலம், வழியாக நடனம் ஆடியபடி ஊர்வலமாக சென்று காளியம்மன் கோவிலுக்கு சென்று தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். இந்த இளைஞர்கள் விளையாட்டு ஆட்ட அக்னிச்சட்டி ஊர்வலத்தை இருபுறம் இருந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.