பழநி கிரிவீதியில் உயர் மட்ட நிழல் மண்டபங்கள் அமைக்கத் திட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூன் 2025 05:06
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகம் கிரிவீதியில் உயர்மட்ட நிழல் மண்டபங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது.
பழநி முருகன் கோயில் கிரி 2.9 கி.மீ உள்ளது. இதில் உயர் மட்ட நிழல் மண்டபங்கள் பாத விநாயகர் கோயில், வின்ச் ஸ்டேஷன் அருகே அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது வடக்கு கிரி வீதியில் பாதவிநாயகர் கோயிலில் இருந்து குடமுழுக்கு மண்டபம் வரை தற்காலிக நிழற் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதை மழை, வெயில் காலங்களில் பக்தர்களுக்கு சிரமத்தை தவிர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கிரிவீதியில் தேரோட்டம் நடக்கும் திருவிழா காலங்கள், காற்று அதிகம் வீசும் காலங்களில் நிழல் பந்தல் அகற்றப்பட்டு மீண்டும் அமைக்கப்படுகின்றன. கோயில் நிர்வாகம் வடக்கு கிரிவீதி, அழகு நாச்சியம்மன் கோயில் கொடைக்கானல் ரோடு பகுதிகளில் கிரிவீதியில் உயர்மட்ட நிழல் மண்டபங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதனால் நிரந்தரமாக பக்தர்கள் சிரமமின்றி மழை, வெயில் காலங்களில் கிரிவலம் வர ஏதுவாக இருக்கும். இதே போல் ரோப் கார் பகுதியில் உள்ள கிரி வீதியிலும் உயர் மட்ட நிழல் மண்டபங்கள் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.