பதிவு செய்த நாள்
19
ஜூன்
2025
05:06
மேட்டுப்பாளையம்; ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ, காரமடையில் இரவில் பூத்தது.
பிரம்மாவிற்கு உகந்த பூவானது பிரம்ம கமலம். இந்த பூவின் நடுவில் பார்த்தால், பிரம்மா படுத்திருப்பது போன்றும், அதன் மேல் நாகம் படம் எடுத்திருப்பது போன்றும் காணப்படும். இந்த பிரம்ம கமலம் பூ ஒரு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் அதிசய பூவாகும். ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தான் அதிகம் பூக்கம். இந்த பூ இலையில் இருந்தே பூ பூக்கிறது. இரவு நேரங்களில் மட்டுமே பிரம்ம கமலம் பூ மலரத் தொடங்கும். பிரம்ம கமலம் பூ இமய மலை பகுதிகளில் அதிகம் காணமுடியும். இந்நிலையில் கோவை மாவட்டம் காரமடையில் வசித்து வரும் கோவை வடக்கு மாவட்ட பா.ஜ.,பொதுச்செயலாளர் விக்னேஷ், தனது வீட்டில் பிரம்ம கமலம் பூ செடியை நான்கு ஆண்டுகளாக வளர்த்து வருகிறார். நேற்று இரவு இரண்டு பிரம்ம கமலம் பூ பூத்துள்ளது. அவரது குடும்பத்தினர் பிரம்ம கமல பூச்செடிக்கு பூஜை செய்து வழிபட்டனர். மேலும், அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.