பதிவு செய்த நாள்
20
ஜூன்
2025
11:06
திருச்செங்கோடு; திருச்செங்கோடு, அர்த்த நாரீஸ்வரர் மலைக்கோவில் கருவறை முன் அர்த்தமண்டபத்தில், சிசிடிவி கேமராக் களை பொருத்த எதிர்ப்பு தெரி வித்து, அர்ச்சகர்கள், கோவில் பிரகாரத்தை வலம் வந்து போராட்டம் நடத்தினர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அர்த்தநா ரீஸ்வரர் மலைக்கோவில் பிரசித்தி பெற்ற தலமாகும். இங்கு கோவில் பாதுகாப்பு ஏற்பாடுகளில், சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என நீதிமன்றம், காவல்துறை மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளின் வழிகாட்டு தல்படி, அர்த்தநாரீஸ்வரர் சன்னதி கருவறைக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபம் முன். கருவறை பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், சிசிடிவி கேமராக்கள் அர்த்தமண்டப வாயில் நோக்கியபடி வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன் ஒருபகுதியாக, கோவில் கருவறை முன், சிசிடிவி கேமராக்கள் பொருத்த அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அர்ச்சகர்கள் அர்த்தநாரீஸ்வரர் சன்னதி முன் நேற்று காலை, 9:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை ஜபம் செய்து, வைக் காதே வைக்காதே கருவறையில் கேமரா வைக்காதே, தொடாதே தொடாதே கருவறை கதவை தொடாதே. தலையிடாதே தலையிடாதே உள்துறையில் தலையிடாதே என, வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பிரகாரத்தை வலம் வந்து எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தை தொடர்ந்தனர். அர்ச்சகர்கள் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது, மாலை, 6:00 மணி யளவில் அறநிலையத்துறை அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் கேமிரா பொருத்த நடவடிக்கையில் ஈடுபட் டனர். அதற்கு அர்ச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கோவில் உதவி கமிஷனர் ரமணிகாந்தன், போலீசார் முன்னிலையில், அர்ச்சகர்களிடம், சிசிடிவி கேமரா அர்த்தமண்டபத்தில் வைக்க வேண்டும். கேரி பேக் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கண்காணிக்க வசதியாக இருக்கும். ஆகவே. கேமரா வைக்க வேண்டும். என, தெரிவித்தார். அர்த்தமண் டபத்தில் கேமரா வைக்கக் கூடாது என அர்ச்சகர்கள் கூறவே, ஒரு மணி நேரத்திற்கு பின் கேமரா பொருத்தாமல் சென்று விட்டனர். அர்ச்சகர்கள் கூறியதாவது: அர்த்தமண்டபம் தவிர, மற்ற பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்தலாம். திருவண்ணாமலை கோவிலில் உள்ளது போல, முழுமையான ஸ்கேன் செய்து கண்காணிக்கலாம். பகலில் கோவில் பாதுகாப்புக்கு பாதுகாவலர்கள் இல்லை. இரவிலும் ஒரு கோவில் பணியாளர், ஒரு துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் மட்டுமே உள்ளனர். அவர்களும் பணிசுமை காரணமாக காலம் கடந்து தான் பணிக்கு வருகின்றனர். கோவில் பணிக்கு என மூதா தையர்கள் வழியில், நாங்கள் பணியை தொடர்ந்து செய்து வருகிறோம். என கூறினர். கோவில் உதவி ஆணையர் ரமணிகாந்தன் கூறுகையில் "கருவறை உள்ளே செல்லும் அர்ச்சகர்கள் பெரிய பைகள், மொபைல் போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை கொண்டு செல்லக் கூடாது என்ற நடைமுறைகளை, கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்றார்.