பதிவு செய்த நாள்
20
ஜூன்
2025
12:06
மானாமதுரை; மானாமதுரை தல்லாகுளம் தர்ம முனிஸ்வரர் கோயில் கிடா வெட்டு அன்னதான பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரை, ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் மானாமதுரை தல்லாகுளத்தில் ஊரின் காவல் தெய்வமாக தர்ம முனீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு செவ்வாய்,வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் ஆடு கோழிகளை பலியிட்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் இன்று கிடாவெட்டு அன்னதான பூஜை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த வாரம் ஏராளமான பக்தர்கள் கோயிலில் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். இன்று பூஜையை முன்னிட்டு அதிகாலை சுவாமிகளுக்கு பால், பன்னீர், சந்தனம், நெய், தயிர்,இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து பூஜைகள் செய்தனர். பின்னர் ஆடுகள் மற்றும் கோழிகளை பலியிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் கோயில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.