திருப்பரங்குன்றம்; மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு விழிப்புணர்வை முன்னிட்டு பா.ஜ., திருப்பரங்குன்றம் மண்டலம் சார்பில் திருப்பரங்குன்றத்தில் இன்று மாலை 4:00முதல் மாலை 6:00 மணிவரை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து நகரின் முக்கிய வழியாக நான்கு அடி உயர பித்தளை வேல் ஊர்வலமாக கொண்டு செல்ல மண்டல் தலைவர் வேல்முருகன் திருப்பரங்குன்றம் போலீசாரிடம் அனுமதி கேட்டு மனு கொடுத்தார். வேல் ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
வேல்முருகன் கூறுகையில், மதுரையில் ஜூன் 14 முதல் ஜூன் 29வரை ஊர்வலம் ஆர்ப்பாட்டம் பொதுக்கூட்டம் நடத்த தடை உத்தரவு உள்ளது. இந்நிலையில் வேல் ஊர்வலம் சென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை உருவாகும். பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும். அதனால் வேல் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது என போலீசார் கடிதம் கொடுத்துள்ளனர். ஹிந்துக்களையும் முருக பக்தர்களையும் தி.மு.க., அரசும், போலீசாரும் தொடர்ந்து அவமதித்து வருவது வேதனைக்குரியது என்றார்.