Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமநாதபுரம் அருகே வறட்சியிலும் ... துாய இருதய ஆண்டவர் பசிலிக்காவின் 118ம் ஆண்டு பெருவிழா துவக்கம் துாய இருதய ஆண்டவர் பசிலிக்காவின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழமையான அய்யனார் கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
பழமையான அய்யனார் கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் வலியுறுத்தல்

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2025
05:06

திருவாடானை; திருவாடானை அருகே திருவெற்றியூர் கண்மாய்க்குள் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த குன்னமுடைய அய்யனார் கோயில் பராமரிப்பு இல்லாமல் பாழடைந்துள்ளது. கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.தமிழகத்தில் அய்யனார் வழிபாடு முதன்மை இடத்தில் உள்ளது. பண்டைய காலத்தில் அய்யனார் கோயில்கள் அடர்ந்த காடுகளுக்கு இடையே, வனப்பகுதியில் அமைந்திருக்கும். காலப்போக்கில் கிராமங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் கோயில் அமைத்து வழிபட்டு வருகின்றனர். கிராமங்களில் எல்லைச்சாமியாய், மண்ணையும் மக்களையும் காக்கும் காவல் தெய்வமாக திகழ்பவர் அய்யனார். திருவாடானை அருகே திருவெற்றியூரில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த குன்னமுடையார் அய்யனார் கோயில் உள்ளது. இக் கோயில் கண்மாய்க்குள் கட்டபட்டுள்ளது. ஆண்டுதோறும் சித்திரையில் திருவிழா நடக்கும். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக கண்மாயில் தண்ணீர் தேங்கியிருப்பதால் பக்தர்கள் கோயிலுக்கு செல்லமுடியவில்லை. இதனால் விழா நடத்த முடியாமல் பக்தர்கள் கவலையடைந்துள்ளனர். 

இது குறித்து திருவெற்றியூர் மக்கள் கூறியதாவது; கோயில் கருவறையில் அய்யனார் தமது மனைவியர்களான பூர்ணா, புஷ்கலா ஆகியோருடன் காட்சியளிக்கிறார். கோயிலை சுற்றி 10 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியிருப்பதால் செல்லமுடியவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக திருவிழாவும் நடத்த முடியவில்லை. கோயிலை சுற்றி மரங்கள் அடர்ந்து பாழடைந்துள்ளது. சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளன. எனவே கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். தேவஸ்தான அலுவலர்கள் கூறியதாவது– திருவெற்றியூர் பாகம்பிரியாள், வாழவந்த நாயகி, கருப்பர், குன்னமுடை அய்யனார் ஆகிய கோயில்களுக்கு திருப்பணி நடத்த முடிவு செய்யபட்டுள்ளது. தொல்லியல் துறையினர் பார்வையிட்டனர். அரசு அனுமதி கிடைத்தவுடன் பணிகள் துவங்கும் என்றனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; பெரிய நாயக்கன்பாளையம், குப்பிச்சிபாளையம் ரோடில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
சோழவந்தான்; சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா தீர்த்தவாரி உற்ஸவத்துடன் ... மேலும்
 
temple news
தேனி; தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் நடராஜன் சிவகாமியம்மாள் சுவாமி முன் ஆனி திருமஞ்சனத்தையொட்டி ... மேலும்
 
temple news
உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே, 22 ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்ட பஞ்சலோக சிலைகள், ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நடைபெறும் மஹா ருத்ர ஹோம பூஜையில் பங்கேற்க வந்த தருமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar