பதிவு செய்த நாள்
23
ஜூன்
2025
10:06
மதுரை; திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே சொந்தம் என மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இம்மாநாட்டில் ஹிந்து முன்னணி பொதுச் செயலர் கிஷோர் குமார் 6 தீர்மானங்களை வாசித்தார்.
இதன் விபரம்: 1வரும் கார்த்திகை திருநாளில் திருப்பரங்குன்றம் மலை மீது, மீண்டும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்
2பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடிக்கு பாராட்டு
3குன்றம் குமரனுக்கே சொந்தம் என, முருகன் மலைகளை காக்க வேண்டும்
4தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து, ஹிந்து சமய அறநிலையத் துறையை வெளியேற்ற வேண்டும்
5வரும் தேர்தல்களில் ஹிந்துக்கள் ஒற்றுமையாக இருந்து, ஹிந்துக்களின் ஓட்டு வங்கியை நிரூபிக்க வேண்டும்
6ஒவ்வொரு சஷ்டி தினத்தன்றும், கந்த சஷ்டி கவசத்தை மக்கள் ஒன்றுசேர்ந்து பாட வேண்டும்.
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ்., தென் பாரத அமைப்பாளர் வன்னியராஜன் பேசியதாவது: இது தமிழகத்தில் ஹிந்து சமூகத்தில் மாற்றம் கொண்டு வரும் எழுச்சி மாநாடு. இம்மாநாடு வெற்றிக்கு காரணம் ஒற்றுமை. ஹிந்து சமுதாயம் எழுச்சி பெற வேண்டும் என்பது இறைவனின் விருப்பம். ஹிந்துவின் எழுச்சி தேசியத்தின் எழுச்சி. ஹிந்து சமுதாயம் ஒன்றுபட வேண்டும். அதற்காக 100 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட இயக்கம் ஆர்.எஸ்.எஸ்., உலகம் முழுதும் ஒரே குடும்பமாக போற்றிய சமூகம் நம் சமூகம். பல உயர்ந்த சிந்தனைகளை கொண்டது. எல்லா பெண்களையும் தாயாக போற்றும், பிறர் செல்வங்களை மண்ணுக்கு சமமாக கருதுவதும் நம் தர்மம். தீண்டாமை, ஏற்ற தாழ்வுகள் நம் சமூகத்தின் வீழ்ச்சியாக இருந்தது. தீண்டாமை ஒரு பாவம் என்பது ஆர்.எஸ்.எஸ்., கோட்பாடு.கோயில்களில் அனைத்து சமூகத்தினரும் வழிபாடு செய்ய வேண்டும். நம்மிடம் உள்ள தீண்டாமையை வேருடன் அழிக்க வேண்டும். இந்த மாநாடு அத்தகைய மாற்றத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. இவ்வாறு பேசினார்.