Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கத்தில் அகோபிலமடம் ஜீயர் ... திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ஆனி கிருத்திகை விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ஆனி கிருத்திகை விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2025
11:06

திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், ஆனி கிருத்திகை விழா, நேற்று விமரிசையாக நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி பெருமாள் கோவிலில், மாதந்தோறும் கிருத்திகை விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்றும், ஆனி மாத கிருத்திகை விழா, வெகு விமரிசையாக நடைபெற்றது. நேற்று காலை 3:00 மணியளவில், கோவில் நடை திறக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளுடனும் கிருத்திகை வந்ததால், சுவாமியை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டனர். பக்தர்களில் பலர் காவடி எடுத்தும், மொட்டை அடித்தும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். இத்துடன், வட்ட மண்டப தொட்டியில் உப்பு, மிளகு ஆகியவற்றை, பிரார்த்தனையாக செலுத்தினர். ஆடு, சேவல்களை பிரார்த்தனையாக கோவிலுக்கு விட்டனர். சிதறு தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முருகர் உருவ பொம்மைகளை, உண்டியல்களில் போட்டனர். மாலையில் கந்தசுவாமி பெருமான், வள்ளி மற்றும்- தெய்வானையுடன், சிறப்பு அலங்காரத்தில் நான்கு மாட வீதிகளிலும் திருவீதிவுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் வளாகம், மாடவீதிகள் என, பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. முன்னதாக நேற்று முன்தினம் இரவு, பரணி உத்சவத்தில் கந்த பெருமான் சிறப்பு அலங்காரத்தில், மயில் வாகனத்தில் மாடவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் அர்ச்சனை செய்து கந்த பெருமானை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று நடந்த கிருத்திகை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வேகவதி ஆற்றங்கரையோரம், 16ம் நுாற்றாண்டின் விஜயநகரப் பேரரசு கால சதிகல் சிற்பம் ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், மங்கள வேல் வழிபாடு நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள பல்லி சிலைகள் மாற்ற முயற்சி நடப்பதாக ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பணாமுடீஸ்வரர் கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள அரசமர செடிகளால் சிற்பங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar