Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி திரவுபதியம்மன் கோவிலில் ... வால்பாறை கோவில்களில் கிருத்திகை பூஜை பக்தர்கள் திரளாக பங்கேற்பு வால்பாறை கோவில்களில் கிருத்திகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வராஹி கோவில் பழமை மாறாமல் புதுப்பிக்க பள்ளூர் பக்தர்கள் கோரிக்கை
எழுத்தின் அளவு:
வராஹி கோவில் பழமை மாறாமல் புதுப்பிக்க பள்ளூர் பக்தர்கள் கோரிக்கை

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2025
11:06

காஞ்சிபுரம்; பள்ளூர் வராஹி கோவிலை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், பள்ளூர் கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், திரிபுரசுந்தரி சமேத திருக்குகேஸ்வரர் கோவிலுடன் இணைந்த வராஹி என்கிற அரசாலையம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அம்மன் கோவிலாகும். இங்கு, வளர்பிறை பஞ்சமி, தேய்பிறை பஞ்சமி, அமாவாசை உள்ளிட்ட முக்கிய மங்கள நாட்களில், காஞ்சிபுரம், அரக்கோணம், சென்னை, வேலுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பெண் பக்தர்கள் கோவிலுக்கு வந்து நேர்த்தி கடன் செலுத்திவிட்டு செல்கின்றனர். பஞ்சமி தினத்தன்று கோவிலுக்கு வரும் பக்தர்கள் நலன் கருதி, ஹிந்து சமய அறநிலையத் துறை நிர்வாகம், 200 நபர்களுக்கு அன்னதான திட்டத்தை சமீபத்தில் துவங்கியுள்ளது. இதுதவிர, 28.60 லட்ச ரூபாய் மதிப்பில், புதுப்பித்தல் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுமான பணிக்குரிய டெண்டர் படிவத்தை, ஜூலை- 8ம் தேதி சம்பந்தப்பட்ட செயல் அலுவலரிடம் பெற்றுக் கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டுமான பணிக்கு, கோவிலை சுற்றி இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை, வருவாய், காவல், ஹிந்து சமய அறநிலையத் துறையினர் ஆகியோர் இணைந்து சமீபத்தில் அகற்றினர். இந்நிலையில், வராஹி கோவில் கட்டுமானத்தில் பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என, கிராம மக்களில் ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, பள்ளூர் வராஹி கோவில் செயல் அலுவலர் பிரகாஷ் கூறியதாவது: கோவிலுக்கு முன் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை சமீபத்தில் அகற்றினோம். அதில் பாதிக்கப்பட்ட நபர்களில் ஒரு சிலர் புரளி கிளப்பியுள்ளனர். வராஹி கோவிலுக்கு ஒதுக்கீடு செய்த நிதியை பயன்படுத்தி வளர்ச்சி பணிகள் செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர், பெரிய கோவிலின், தெற்கு புறத்தில் வராஹி அம்மன் சன்னதி உள்ளது.  வராஹி அம்மனை ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ஆனி அமாவாசையான இன்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு அடுத்த பல்லவராயநத்தம் அற்புத அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் ... மேலும்
 
temple news
திருவாரூர்: திருவாரூர் விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் ஆனி அமாவசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர்  கோவில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு தீர்த்தவாரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar