திருமலை; புகழ்பெற்ற ஆட்டோ மொபைல் நிறுவனமான அசோக் லேலண்ட், திருமலை திருப்பதி தேவஸ்தானதிற்கு ஒரு பேருந்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. அசோக் லேலண்டின் எம்&ஹெச்சிவி தலைவர் சஞ்சீவ் குமார், ஸ்ரீவாரி கோயில் முன்பு சுமார் ரூ.35 லட்சம் மதிப்புள்ள பேருந்தை தேவஸ்தானதிடம் ஒப்படைத்தார். கோயில் துணை நிர்வாக அதிகாரி லோகநாதம் கலந்து கொண்டார்.