பதிவு செய்த நாள்
23
ஜூன்
2025
05:06
கடலூர்; சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசன விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஜூலை 1ம் தேதி தேரோட்டமும், 2ம் தேதி ஆனி திருமஞ்சன தரிசனமும் நடைபெறுகிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி மாதம் ஆனி திருமஞ்சன தரிசன விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம் விழாவும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். மற்ற கோவில்களில் மூலவர் கருவறையில் வீற்றிருக்க உற்சவர் வீதியுலா வந்து அருள் பாலிப்பது வழக்கம். நடராஜர் கோவிலுக்கு உள்ள தனித்துவமான சிறப்பு கருவறையில் வீற்றிருக்கும் மூலவரான நடராஜ பெருமானே உற்சவராக இந்த இரண்டு விழாக்களின் போது தேரில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இத்தகைய சிறப்பு மிக்க ஆனித் திருமஞ்சன தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. கொடியேற்றத்தை முன்னிட்டு நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர்,முருகன், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் கொடி மரத்திற்கு முன்பு எழுந்தருளினர். அதனைத் தொடர்ந்து கோவிலின் உற்ச்சவ சிவகைலாஸ் தீட்சிதர் கொடிமரத்தில் கொடியை ஏற்றி விழாவை துவக்கிவைத்தார். தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு தீராதனை நடைபெற்றது. இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை, கடலூர்,உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பக்தர்கள் திரளான கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக 9ம் நாள் விழாவான தேர் திருவிழா வருகின்ற ஜூலை 1ம் தேதியும், முக்கிய விழாவான ஆனி திருமஞ்சன தரிசன விழா ஜூலை 2ம் தேதியும் நடைபெற உள்ளது.