பழநி; பழநி கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.2 கோடி காணிக்கையாக கிடைத்தது. பழநி கோயிலில் நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் எண்ணிக்கையில் ரூ. 2 கோடியே 3 லட்சத்து 3 ஆயிரத்து 600, வெளிநாட்டு கரன்சி 373 எண்ணங்கள், தங்கம் 792 கிராம் வெள்ளி 24.081 கிலோ கிடைத்தது. கல்லூரி மாணவர்கள்,அலுவலர்கள் உண்டியல் எணணும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இணை கமிஷ்னர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.