திருவதிகை சரநாராயண பெருமாளுக்கு நாளை தன்வந்திரி அலங்காரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூன் 2025 10:06
பண்ருட்டி; திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நாளை ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு மூலவர் தன்வந்திரி பெருமாள் அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு நாளை (25ம் தேதி) காலை 6:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடக்கிறது. 8:00 மணிக்கு மூலவர் பெருமாள் தன்வந்திரி பெருமாளாக அருள்பாலிக்கிறார். 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் உள் புறப்பாடு நடந்து, திருக்கண்ணாடி அறையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பகல் 12:30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4:30 மணிக்கு நடை திறப்பு, மாலை 6:00 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடக்கிறது. பக்தர்களுக்கு இலவச பிரசாதமாக லேகியம் வழங்கப்படுகிறது.