பதிவு செய்த நாள்
24
ஜூன்
2025
11:06
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் ஹிந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்டதாகும். இந்த கோவிலில் வெள்ளியங்கிரி ஆண்டவர், மனோன்மணி, முருகர், கருமாரியம்மன் ஆகிய சுவாமிகளுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், விபூதி உள்ளிட்ட, 16 வகை வாசனை திரவியங்களால், வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சுவாமிக்கு அலங்காரம் செய்து, கோவில் அர்ச்சகர் ஜோதி வேலவன் சிறப்பு பூஜை செய்தார். இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.