பதிவு செய்த நாள்
24
ஜூன்
2025
11:06
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி லட்டு பிரசாதம் வாங்குவதற்கான புதிய வசதியை திருப்பதி தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியுள்ளது. திருமலையில் உள்ள லட்டு பிரசாதம் விற்பனை மையத்தில் பக்தர்கள் லட்டுகளை எளிதாக வாங்க கியோஸ்க் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் காத்திருப்பு நேரத்தைக் குறைப்பதற்கும், லட்டு கொள்முதல் செயல்முறையை விரைவாக முடிக்க வாய்ப்பளிப்பதற்கும் இந்த வசதி கிடைக்கச் செய்யப்பட்டுள்ளது. யு.பி.ஐ கட்டண வசதி மூலம் பணம் இல்லாமல் வெளிப்படையான பரிவர்த்தனைகளை உறுதி செய்ய திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
லட்டுகளைப் பெறுவதற்கான நடைமுறை;
1. தரிசன டிக்கெட்டுகள் உள்ளவர்கள்
2. தரிசன டிக்கெட்டுகள் இல்லாதவர்கள்
தரிசன டிக்கெட்டுகள் உள்ளவர்கள்: இந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். இயந்திரம் டிக்கெட் விவரங்களைச் சரிபார்க்கும். டிக்கெட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, ஒரு நபருக்கு கூடுதலாக இரண்டு லட்டுகளை வாங்கலாம்.
தரிசன டிக்கெட் இல்லாதவர்கள்: இந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து சரியான (சரிபார்க்கப்பட்ட) ஆதார் எண்ணை வழங்கவும். இந்த வழியிலும் ஒரு நபருக்கு 2 லட்டுகளை வாங்கலாம். சரியான விருப்பத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு, நீங்கள் யு.பி.ஐ மூலம் கட்டணப் பக்கத்திற்குச் சென்று பரிவர்த்தனையை முடிக்கலாம். பணம் செலுத்திய பிறகு, அச்சிடப்பட்ட ரசீது உங்களுக்குக் கிடைக்கும். அந்த ரசீதுடன், நீங்கள் லட்டு கவுண்டர்களுக்குச் சென்று கூடுதல் லட்டுகளைப் பெறலாம். பக்தர்களின் வசதிக்காக திருப்பதி தேவஸ்தானம் அறிமுகப்படுத்திய இந்த முறைக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.