விளமல் பதஞ்சலி மனோகர் கோவிலில் ஆனி அமாவாசை வழிபாடு; சிவனுக்கு அன்னாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூன் 2025 04:06
திருவாரூர்: திருவாரூர் விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் ஆனி அமாவசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, அன்னாபிஷேகம் நடைபெற்றது.
திருவாரூர் அருகே விளமலில் மிகவும் பழமை வாய்ந்த பதஞ்சலி மனோகரர் திருக்கோவில் உள்ளது. இது தேவாரப்பாடல் பெற்ற திருத்தலமாகும். இக்கோவிலில் முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் அமாவாசை, பவுர்ணமியில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதான நிகழ்ச்சி ஆண்டு தோறும் வெகு சிறப்பாக நடந்து வருகிறது. இன்று ஆனி அமாவாசையை முன்னிட்டு பல்வேறுப்பகுதியில் இருந்து சிவ பக்தர்கள் பிதுர் தோஷத்திற்காக வந்தனர். பின்னர் கோவிலில் நடந்த சிறப்பு அபிஷேக அலங்கார, ஆராதனையில் பங்கேற்றனர். கோவிலில் ஆனி அமாவாசையை முன்னிட்டு அன்னாபிஷேகம் சிறப்பான முறையில் நடந்தது. சந்திர சேகர சிவாச்சாரியார் இந்த அபிஷேகத்தை நடத்தினார். இந்த அபிஷேக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.