திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆனி அமாவாசை தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூன் 2025 04:06
மயிலாடுதுறை; திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற்றது.
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு 3 தீர்த்த குளங்களில் நடந்த சிறப்பு தீர்த்தவாரியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு கிராமத்தில் தேவார பாடல் பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவபெருமானின் அவதாரங்களில் அகோர மூர்த்தியும், நவகிரகங்களில் புதன் பகவானும் தனித்தனி சன்னதிகளில் அருள் பாலித்து வருகின்றனர். இக்கோவிலில் அக்னி, சூரியன், சந்திரன் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன. இந்நிலையில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு அஸ்திர தேவர் மூன்று தீர்த்த குளங்களிளும் தீர்த்தம் அளிக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடி வழிபட்டனர். தீர்த்தவாரி பூஜைகளை சரபேஷ் குருக்கள் செய்து வைத்தார்.