Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் ஆனி ...  20 ஆண்டுக்கு பின் கும்பாபிஷேகம்; காலீஸ்வரர் கோவிலில் புனரமைப்பு பணி 20 ஆண்டுக்கு பின் கும்பாபிஷேகம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி லட்டு தயாரிக்க 2.50 லட்சம் கிலோ நந்தினி நெய்
எழுத்தின் அளவு:
திருப்பதி லட்டு தயாரிக்க  2.50 லட்சம் கிலோ நந்தினி நெய்

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2025
11:06

பெங்களூரு; திருமலை திருப்பதி தேவஸ்தானத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, முதற்கட்டமாக 2.50 லட்சம் கிலோ நெய்யை, பலத்த பாதுகாப்புடன் கே.எம்.எப்., எனும் கர்நாடகா பால் கூட்டமைப்பு அனுப்பி வைத்தது.


ஆந்திர மாநிலம், திருமலை திருப்பதியில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு, உலக பிரசித்தி பெற்றது. இந்த லட்டு தயாரிக்க, கர்நாடக அரசின் கே.எம்.எப்., தயாரிப்பான நந்தினி நெய் வழங்கப்பட்டு வந்தது. கடந்த நான்கைந்து ஆண்டுகளுக்கு முன், இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, தனியார் நிறுவனத்துக்கு, அப்போதைய ஜெகன் மோகன் ரெட்டி அரசு ஒப்பந்தம் வழங்கியது. அந்நிறுவனம் வழங்கிய நெய் தொடர்பாக புகார்கள் எழுந்தன. நெய்யை ஆய்வுக்கு அனுப்பியபோது, அதில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்துவது தெரியவந்தது. இதையடுத்து, அந்நிறுவனத்துடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் கர்நாடகாவின் நந்தினி நெய் வினியோகிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆண்டுக்கு 10 லட்சம் கிலோ நெய் வழங்க வேண்டும் என்பது ஒப்பந்தம். இதன்படி, முதற்கட்டமாக மாண்டியா பால் கூட்டுறவு சங்கத்தில் இருந்து, 2.50 லட்சம் கிலோ நெய், பலத்த பாதுகாப்புடன் நேற்று முன்தினம் திருமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மீதமுள்ள நெய், மாநிலத்தின் மற்ற மாவட்ட பால் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக அனுப்பப்பட உள்ளது. கே.எம்.எப்., அதிகாரிகள் கூறுகையில், ‘கோவில் பூஜைகள், பிரசாதம் தயாரிக்க, ஆன்மிக விழாக்களில் நந்தினி நெய் பயன்படுத்தப்படுகிறது. ‘திருமலை திருப்பதி கோவிலின் தேவைகளை பூர்த்தி செய்ய, நாங்கள் தயாராக இருக்கிறோம். துாய்மை, தரம், நம்பகத்தன்மையுடன் நந்தினி நெய் வழங்குவோம்’ என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்க்கு முகூர்த்தக்கால் நடும் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; உலகப் புகழ்பெற்ற, தஞ்சை பெரிய கோவிலை, கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040வது , கோலாகலமாக ... மேலும்
 
temple news
புதுச்சேரி, கவுசிக பாலசுப்பிரமணியர் கோவில் சஷ்டி நிறைவு விழாவை யொட்டி வள்ளி, தெய்வானை சமேத கௌசிக ... மேலும்
 
temple news
சென்னை; பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோவிலில், 2 கோடி ரூபாயில் திருப்பணிகள் முடிந்த நிலையில் இன்று மகா ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தில்லை கோவிந்தராஜப்பெருமாள் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar