ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் ஆனி சுவாதி உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூன் 2025 03:06
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பெரிய ஆழ்வார் திரு ஆணி சுவாதி உற்ஸவம் கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. இதனை முன்னிட்டு இன்று காலை 8:00 மணிக்கு கோயில் யானை முன் செல்ல கொடிபட்டம் மாடவீதிகள் சுற்றி வந்து வட பத்திர சயனர் சன்னதியில் உள்ள பெரியாழ்வார் சன்னதிக்கு கொண்டுவரப்பட்டது. கொடிமரம் முன்பு சிறப்பு பூஜைகள் செய்து வெங்கடாசல பட்டர் கொடி பட்டம் ஏற்றினார். சிறப்பு பூஜைகளுக்கு பிறகு பெரியாழ்வார் மண்டபம் எழுந்தருளல் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா தலைமையில் அறங்காவலர்கள், செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர். ஜூலை 6 வரை நடக்கும் 11 நாட்கள் திருவிழாவில் தினமும் காலை 10:00 மணிக்கு மண்டபம் எழுந்தருளலும், இரவு 6:00 மணிக்கு மேல் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலாவும் நடக்கிறது. ஜூன் 4 அன்று காலை 7:05 மணிக்கு செப்பு தேரோட்டம் நடக்கிறது.