திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கு 2,000 ஹெல்மெட்கள் விநியோகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூன் 2025 03:06
திருப்பதி; திப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு இன்று வியாழக்கிழமை திருமலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் CVSO முரளிகிருஷ்ணாவுடன் இணைந்து ஊழியர்களுக்கு ஹெல்மெட்களை வழங்கினார்.
இந்த நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேவஸ்தான ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஹெல்மெட் விநியோகத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறினார். சமீபத்தில் 500 ஹெல்மெட்டுகள் விநியோகிக்கப்பட்டதாகவும், அமலாபுரத்தைச் சேர்ந்த நிம்மகாயல சத்யநாராயணா மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த நாகேந்திர பிரசாத் ஆகியோரால் நன்கொடையாக வழங்கப்பட்ட 2,000 ஹெல்மெட்டுகள் தற்போது விநியோகிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். வரும் நாட்களில் மேலும் 7500 ஹெல்மெட்டுகள் ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். அனைவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். திருமலைக்கு வரும் அனைத்து பக்தர்களும் பாதுகாப்பான பயணத்திற்காக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் துணை நிர்வாக இயக்குநர் ராஜேந்திரா, துணை மாவட்ட ஆட்சியர் சதா லட்சுமி, அன்ன பிரசாத சிறப்பு அதிகாரி சாஸ்திரி மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.