Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ... ஆய்க்குடி நவநீத கிருஷ்ணன் கோயிலில் கும்பாபிஷேகம் ஆய்க்குடி நவநீத கிருஷ்ணன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாணிக்கவாசகர் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா
எழுத்தின் அளவு:
மாணிக்கவாசகர் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2025
05:07

சின்னமனூர்; சின்னமனூர் மாணிக்கவாசகர் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழாவில் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் மாணிக்கவாசகருக்கென தனி கோயில் சின்னமனூரில் மட்டுமே உள்ளது. பிரசித்தி பெற்ற இக் கோயிலில் ஆண்டுதோறும் 11 நாட்களுக்கு ஆனித் திருமஞ்சன விழா நடைபெறும். இந்தாண்டிற்கான நிகழ்ச்சி ஜூன் 22 ல் துவங்கியது. திருவிழாவில் 11 நாட்களும் மாலை மூலவர் மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மாணிக்கவாசகர் இத்திருத்தலத்தில் மூன்று மூலவர்களாக இருப்பது தனிச்சிறப்பாகும். மேலும் தெற்கு நோக்கி நின்ற நிலையில் இருக்கும் ஒற்றை சனீஸ்வரபகவான் பக்தர்களின் வேண்டுதலை உடனே நிறைவேற்றுவார் என்பது நம்பிக்கை.

ஆனி திருமஞ்சன விழாவின் ஒரு பகுதியாக மாணிக்கவாசகர் குரு பூஜை ஜூன் 30 ல் நடைபெற்றது. குரு பூஜையை முன்னிட்டு அன்னதானத்தில் முக்கனிகள் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஜூலை முதல் தேதி ஆனி உத்திரம் மற்றும் நடராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. நேற்று காலை ஆனித் திருமஞ்சன திருவிழா நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த ஆனித் திருமஞ்சன விழாவில் மூன்று உற்சவர்கள், விநாயகர், சிவகாமியம்மன், நடராஜர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மாணிக்கவாசகருக்கு பிரத்யேகமாக மஞ்சள் அபிஷேகம் நடைபெற்றது . இந்த நிகழ்ச்சிகளில் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாதங்களாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் நதியா , பரம்பரை அறங்காவலர் திருவாசகம், தமிழாசிரியர்கள் வெங்கடாச்சலம் , வேலு ஆகியோர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar