வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூலை 2025 11:07
மந்தாரக்குப்பம்; மந்தாரக்குப்பம் கணபதி நகரில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த மாதம் 16ம் தேதி கும்பாபிஷேகம் விழா நடந்தது. அதனை தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிஷேகம் நடந்து வந்தது. நிறைவு நாளான நேற்று காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, மகாயாகம் நடந்தது. அதை தொடர்ந்து யாகத்தின் வைக்கப்பட்ட கலசங்கள் ஆலயத்தை சுற்றி வந்து அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை நெய்வேலி கன்னிகா பரமேஸ்வரி ஆலயம், ஆரிய வைசிய சமாஜம் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.