ரிஷிவந்தியம்; பாவந்துாரில் மாரியம்மன் கோவில் தீமிதி மற்றும் தேர்திருவிழா இன்று நடந்தது.
ரிஷிவந்தியம் அடுத்த பாவந்துார் மாரியம்மன் கோவில் தேர்திருவிழா கடந்த மே மாதம் 20ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் காலை, மாலையில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், சக்தி அம்மன் பிறப்பு, மாரியம்மன் முத்து வரம் வாங்குதல், கன்னிமார் பூ எடுத்தல், காத்தவராயன் பிறப்பு உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடந்தது. நேற்று காத்தவராயன் ஆரியமாலா திருக்கல்யாணமும், ஊரணி பொங்கல் வைத்தல் நடந்தது. பொதுமக்கள் பலர் பொங்கல் வைத்து சுவாமி வழிபாடு செய்தனர். இன்று காலை நடந்த தீமிதி திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து தங்களது நேத்தி கடன் செலுத்தினர். தொடர்ந்து நடந்த தேர்திருவிழாவில் பொதுமக்கள் தேர் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.