கோவை; கோவை – பாலக்காடு ரோடு, மதுக்கரை, மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற தர்மலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், 10ம் தேதி நடக்கிறது. இதற்கான விழா 7ம்தேதி மாலை, 5:00க்கு திருவிளக்கு, விநாயகர், புனிதநீர், திருமகள் மற்றும் பேரொளி வழிபாடுகளுடன் துவங்குகிறது. 8ம் தேதி காலை, 8:45க்கு, ஐங்கரன் வேள்வி, 11:00க்கு மண் எடுத்தல், முளையிடுதல், காப்பணிதல் வழிபாடு, பிற்பகல், 3:00க்கு திருக்குடங்கள் வேள்வி சாலைக்கு கொண்டு செல்தல், மாலை, 4:30க்கு முதற்கால வேள்வி நடக்கின்றன. 9ம் தேதி காலை, 6:30க்கு திருப்பள்ளியெழுச்சி, 9:30க்கு, இரண்டாம் கால வேள்வி, மாலை, 4:00க்கு, மூன்றாம் கால வேள்வி நடக்கின்றன. 10ம் தேதி காலை, 6:00 மணிக்கு, மூலமூர்த்திகளுக்கு ஆனைந்தாட்டல், காப்பணிவித்தல், 6:15க்கு, நான்காம் கால வேள்வி நடக்கின்றன. காலை, 7:45க்கு, திருக்குடங்கள் புறப்பாடு, 8:30க்கு ராஜகோபுரம், விமானங்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.