முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூலை 2025 07:07
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் மீனாட்சி பட்டாபிஷேகம் நடந்தது. சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட இக்கோயிலின் ஆனித் திருவிழா ஜூன் 30 ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜூன் 5ல் கழுவன் திருவிழா நடந்தது. நேற்று மீனாட்சி பட்டாபிஷேகம் நடந்தது. மாலை 6:30 மணிக்கு மீனாட்சி சொக்கநாதருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. 8ம் நாளான இன்று (ஜூலை 7) இரவு 8:00 மணிக்கு மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் நடக்கிறது. நாளை (ஜூலை 8) ஆனித் தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை முறையூர் கிராமத்தார்கள் சிவகங்கை தேவஸ்தானம் செய்து வருகின்றனர்.