சோளிங்கர் யோக நரசிம்மர் கோவிலில் 57 ஆண்டுக்கு பின் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூலை 2025 10:07
சோளிங்கர்; சோளிங்கர் யோக நரசிம்மர் கோவிலில் 57 ஆண்டுக்கு பின் இன்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் யோக நரசிம்ம சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு எதிரே உள்ள சின்ன மலையில், யோக அனுமன் அருள்பாலித்து வருகிறார். யோக நரசிம்மரை வழிபடும் பக்தர்களின் வேண்டுதலை, யோக அனுமன் நிறைவேற்றுவதாக ஐதீகம். சிறிய மலையில் அருள்பாலிக்கும் யோக அனுமன் கோவில் புனரமைப்பு பணிகள், மூன்று ஆண்டுகளாக நடந்து வந்தன. தற்போது, பணி நிறைவடைந்துள்ள நிலையில், இன்று 7ம் தேதி காலை 9:00 மணிக்கு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக யாகசாலை பூஜை, கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 57 ஆண்டுகளுக்கு பின், தற்போது தான் இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, சோளிங்கர் வட்டத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று (7 ம்தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.