குறிஞ்சிப்பாடி; குறிஞ்சிப்பாடி புத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. குறிஞ்சிப்பாடி பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற புத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. காலை 5:00 மணிக்கு, கோ பூஜை, அம்பாளுக்கு ரக்ஷாபந்தனம், ஸ்பரிசாஹூதி, தத்வார்த்கலை, நான்காம் கால பூஜைகள், மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. இதையடுத்து, 9:45 மணிக்கு கடம் புறப்பாடாகி, விமான கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. நிகழ்வில் குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இரவு 7:00 மணிக்கு, புத்து மாரியம்மன் மகா அபிஷேகம் மற்றும், திருவீதி உலா நடந்தது.